ஊரடங்கு காரணமாக பயணிகளின் போதுமான ஆதரவு இன்மையால் சில ரயில்கள் ஜூன் 15-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.கரோனா பெருந்தொற்று காரணமாக வருகின்ற மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரயில் நிலையங்களில் பொது மக்களின் வருகை பெருமளவு குறைந்துள்ளது.இதனால் பயணிகளின் போதிய ஆதரவின்மை காரணமாக சில ரயில்கள் மே 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த ரயில்கள் ரத்து ஜூன் 15 வரை நீட்டிக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.வண்டி எண் 06321/06322 நாகர்கோவில் – கோயம்புத்தூர் – நாகர்கோவில் பகல்நேர சிறப்பு விரைவு ரயில் மற்றும் வண்டி எண் 02613/02614 சென்னை எழும்பூர் மதுரை சென்னை எழும்பூர் தேஜாஸ் சிறப்பு ரயில் ஆகியவை ஜூன் 15 வரை ரத்து செய்யப்படுகிறது.மேலும் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர், டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – பெங்களூரு, சென்னை எழும்பூர் – திருச்சி, கோயம்புத்தூர் – மங்களூர் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களும் ஜூன் 15 வரை ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.