11
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சிந்தாமணி கண்ணன் காலனி பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி .இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற தெம்மாங்கு பாடகர் .தற்பொழுது நடைபெறும் கரோனா 2வது அலை காரணமாக நாட்டுப்புற கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இன்றி வறுமையில் வாடும் சூழ்நிலை உள்ளது.இதனால் தன்னார்வ அமைப்புகளை தொடர்பு கொண்டு நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ததன் பேரில் ரிலையன்ஸ் பவுண்டேசன் மூலம் மதுரையை சேர்ந்த சமூக சேவகர் முருகேசன் ஏற்பாட்டின் பேரில் ரூபாய் 70 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, எண்ணெய், மளிகை சாமான் ,பருப்பு உள்ளிட்ட பொருட்கள் 70 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.