திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் நாள்தோறும் ஊரடங்கு காலம் வரை ஏழை எளியோர் பயன்பெறும் வண்ணம்இலவசஉணவு வழங்க திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா பணம் கட்டினார்.. இந்தக் கொரோனோ காலத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் கழக நிர்வாகிகள் பணம் கட்டி அதற்குரிய உணவை வழங்கி வருகின்றனர்.அதன்படி திருப்பரங்குன்றம் தொகுதியின் சார்பில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக மாவட்ட கழக செயலாளரரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.வி. ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றத்தில் உள்ள அம்மா உணவகத்தில் அதற்குரிய கட்டணத்தை செலுத்தினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய கழக செயலாளர் நிவையூர் முருகன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ஓம்.கே.சந்திரன் பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், பகுதி கழகதுணைச் செயலாளர் ஹார்விபட்டி செல்வம் வட்டக் கழக செயலாளர்கள் நாகரத்தினம் ,பொன்முருகன், ஜெய கல்யாணி, கோபால், முருகேசன், பாலமுருகன், எம் ஆர் கே குமார், சோ.ராசுஉட்பட பலர் இருந்தனர்.இதில் நாள்தோறும் 1500 ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.