தமிழகம் முழுவதும் கொரொண தொற்று காரணமாக முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால் போக்குவரத்து மற்றும் ஆட்டோ டாக்சிகள் அனைத்தும் இயக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் முன் களப்பணியாளர் அதற்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் மதுரை மண்டலம் சார்பாக சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது உசிலம்பட்டி செக்கானூரணி கருமாத்தூர் நாகமலை புதுக்கோட்டை. மேலூர் விக்கிரமங்கலம் சோழவந்தான் பேரையூர் கல்லுப்பட்டி திருமங்கலம் வாடிப்பட்டி அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து காலை 6 மணிக்கும் மதியம் 12 மணிக்கு மீண்டும் மாலை 6 மணிக்கும் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் அழைத்து வருவதற்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இது அரசு மருத்துவமனை இருந்து பெறப்பட்டு சம்பந்தப்பட்ட வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் இயக்கப்படும் இதில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.