Home செய்திகள் பசும்பொன் நகரில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலின் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பசும்பொன் நகரில் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலின் பங்குனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

by mohan

பூக்குழி , பறவை காவடி, அலகு குத்தி பால்குடம் என ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட ணர்,மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்குட்பட்ட அவனியாபுரம் பசும்பொன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் 71-வது ஆண்டு பங்குனி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருவிழாவின் முதல் நாள் விழாவாக இன்று ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.குறிப்பாக ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், ராட்சச வாகனத்தில் பறவைக்காவடி எடுத்தும், 5 முதல் 20 அடி நீளம் வரை பக்தர்கள் அழகு குத்தியும், ஆண்கள் பெண்கள் என அனைத்து பக்தர்களும் பூக்குழியில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியதோடு மாரியம்மனை தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் போது மக்கள் பக்தி மையத்தில் மிதந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com