Home செய்திகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஜெயலட்சுமி .

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஜெயலட்சுமி .

by mohan

சோழவந்தான் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் திருமதி ஜெயலட்சுமி சோழவந்தான் பேரூர் உட்பட்ட 18 வார்டுகளில் தனது தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகக் கூட்டணியில் சோழவந்தான் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஜெயலட்சுமிசோழவந்தான் பேரூர் பகுதிகளில் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்:சோழவந்தான்மதுரை மாவட்டம், சோழவந்தானில்18 வார்டுகளில் பொதுமக்களை சந்தித்து முரசு சின்னத்திற்கு வாக்கு கேட்டார் தேமுதிக வேட்பாளர் ஜெயலட்சுமி.முன்னதாக , அவர் சப்பானி கோவில் தெருவில் உள்ள செல்லாயி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரச்சாரத்தை தொடங்கினார் தொடர்ந்து, கீழப் பச்சேரி, மேல பச்சேரி, தெற்கு ரத வீதி , மேல ரதவீதி , பெரியகடைவீதி, பசும்பொன் நகர், பேட்டை, சங்கம் கோட்டை , முதலியார் கோட்டை ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது, பெண்கள் மற்றும் பெரியோர்கள் வேட்பாளரை வரவேற்று மரியாதை செய்தனர். கடை வீதிகளில் உள்ள வியாபாரிகளே சந்தித்து நோட்டீஸ்களை வழங்கி முரசு சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார். கழக நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜன் சோழவந்தான் பேரூர் செயலாளர் சத்ய பிரகாஷ் வாடிப்பட்டி பேரூர் செயலாளர் மதன் விவசாய பிரிவு மாவட்ட ச் செயலாளர் முல்லை சக்தி மற்றும் தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் ஒன்றியக் கழகச் செயலாளர் தெய்வேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர் தொடர்ந்து சோழவந்தான் பேரூர் பகுதியில் உள்ள 18 வார்டுகளிலும் பிரச்சார வேனில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com