மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள திருமால் கிராமத்தைச் சேர்ந்தவர் மொக்கை இவரது மகன்கள் ராஜாராம் 45 மாயாண்டி 40.இதில் ராஜாராம் தனியார் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்த்து வந்தார் . இந்த நிலையில் நிலத்தின் சொந்தக்காரர் நிலத்தை விற்பதற்கான ஏற்பாட்டைச் செய்தார் . இதற்காக ராஜாராமுக்கு அவர் ஒரு லட்சத்தி பத்தாயிரம் கமிஷன் தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது.இதை அறிந்து அவரது தம்பி மாயாண்டி அப்பா களத்தில் இருந்து இந்த நிலத்தை உழுது செய்து வருகிறோம் . வாங்கிய கமிஷன் தொகையில் எனக்கும் பங்கு வேண்டும் என தகராறு செய்தார் . இது தொடர்பாக அண்ணன் தம்பிக்கு இடையே மோதல் ஏற்பட்டது . ஆத்திரமடைந்த ராஜாராம் உலக்கையை எடுத்து முனியாண்டியை தாக்கினார் . இதில் படுகாயம் அடைந்த அவர் காரியாபட்டி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் . பின்னர் மேல் சிகிச்சைக்காக மாயாண்டி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் . அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் . இதுதொடர்பாக போலீசார் ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.