Home செய்திகள் வீட்டை உடைத்து நகை கொள்ளை.

மதுரை திருமங்கலத்தில் வீட்டை உடைத்து நகை கொள்ளையடித்து சென்ற ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். திருமங்கலம் காமராசர் வடக்குப்பகுதியைசேர்ந்தவர் குருசாமி47. இவர் குடும்பத்துடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் அவருக்கு பக்கத்து வீட்டுக்காரரிடம் இருந்து வீடுஉடைக்கப்பட்டிருப்பதாக போன் வந்தது. அதை தொடர்ந்து குருசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூபாய் 32,000 மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது இந்த சம்பவம் தொடர்பாக குருசாமி திருமங்கலம்போலீசில்புகார்செய்தார்‌ போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையடித்த ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!