தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்து சட்ட சபை தொகுதிகளில் நடக்கும் தேர்தலை கண்காணிக்க 4 தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் ஒரு காவல் பார்வையாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.திருநெல்வேலி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான வே.விஷ்ணு, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அன்பு ஆகியோர் முன்னிலையில் பொதுத் தேர்தல் பார்வையாளர்கள் டாக்டர் சுப்ரதா குப்தா திருநெல்வேலி பாளையங்கோட்டை, சுரேந்திர நாராயண பாண்டே அம்பாசமுத்திரம், நூன்சவாத் திருமலை நாயக் நாங்குநேரி, அலாகேஷ் பிரோசாத்ராய் ராதாபுரம், மாவட்ட காவல் பார்வையாளர் சுதன்ஸ் குமார் ஆகியோர் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறையில் வாக்கு இயந்திரங்கள் வைப்பது குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள். அதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான வே.விஷ்ணு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர்களுடன் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் பாதுகாப்பு அறை ஆகியவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் மின்சாரம் குடிநீர் தடையின்றி கிடைப்பதை பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். இவ்வாய்வின் போது சார் ஆட்சியர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவ கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலி,பிரதிக் தயாள் சேரன்மாதேவி, காவல் துணை ஆணையர்கள் மகேஷ் குமார் மற்றும் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் நாங்குநேரி தேர்தல் நடத்தும் அலுவலர் குழந்தைசாமி,ராதாபுரம் தேர்தல் நடத்தும் அலுவலர் உஷா ,பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் ஜெயராமன்,உதவி இயக்குனர் நில அளவை வாசுதேவன், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.