Home செய்திகள் நடத்தையில் சந்தேகம் மனைவியை வெட்டி கொலைகணவர் கைது.

மதுரை நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் மனைவியை வெட்டிக்கொலை செய்தார்.அவரை போலீசார் கைது செய்தனர் .மதுரை கோச்சடை முத்தையா கோவில் தெரு 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா மனைவி ராஜேஸ்வரி 39 .கணவர் சுப்பையாவுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து வந்தது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் தகராறு நடந்தது. இதில் ஆத்திரமடைந்த கணவர் சுப்பையா மனைவி ராஜேஸ்வரியை அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரியின் தம்பி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனிபோலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை கொலை செய்த கணவர் சுப்பையாவை கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com