28
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு தென்றல் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் 42 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதன் காரணமாக நெஞ்சு வலியும் ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட முருகேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது குறித்து மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.