33
மதுரை தெப்பக்குளத்தில் மாநகராட்சி லாரி மோதி சாலையை கடந்த வாலிபர் பலியானார். உசிலம்பட்டி அய்யனார் குளத்தை சேர்ந்தவர் தவசி மகன் தங்கமாயன் 23 .இவர் மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் தனியார் கல்லூரி முன்பாக சாலையை கடந்தபோது அந்த வழியாக சென்ற மாநகராட்சி லாரி மோதியது.இதில் தங்கமாயன் சம்பவ இடத்திலேயே பலியானார் .இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மாநகராட்சி லாரி டிரைவர் சிலைமானை சேர்ந்த அரியமுத்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.