Home செய்திகள் திமுக ஆட்சி வந்தவுடன் மேல்செங்கம் பண்ணை விவசாயக் கல்லூரியாக மாற்றப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் கோனாகுட்டை கேட் கலைஞர் திடலில் செங்கம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் மு.பெ.கிரி ஆதரித்து செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் வேணுகோபால் தலைமையில் நடைபெற்றது. மாநில மருத்துவ அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், அண்ணாமலை, ரமேஷ் சிவராமன் பேரூராட்சி செயலாளர் சாதிக் பாஷா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக தண்டராம்பட்டு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் அனைவரையும் வரவேற்று பேசினார்.சிறப்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்;திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கை மக்கள் நலனுக்காகவும் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக அமைந்துள்ளதுகல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை , மேல்செங்கம் பண்ணை விவசாயக் கல்லூரியாக மாற்றப்படும் எனவும் ஜவ்வாது மலை மலைவாழ் மக்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். மேலும் செங்கம் அரசு பொது மருத்துவமனை நவீன மயமாக்கப்படும். தேர்தல் அறிக்கையில் உள்ளது. திமுக ஒவ்வொரு தொண்டர்களும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில். நம்முடைய வெற்றி வேட்பாளர் மு.பெ.கிரி வெற்றி பெற செய்வது நமது தலையாயக் கடமையாகும். இவ்வாறு பேசினார்.முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு திமுக வேட்பாளர் கிரியை ஆதரித்து பேசும் போது ,திமுக வேட்பாளர் கண்கலங்கினார்.தோழமைக் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜி.குமார் ,மதிமுக மாவட்டச் செயலாளர் சீனி.கார்த்திகேயன், சிபிஐ மாநில குழு உறுப்பினர் வீரபத்திரன் ,சிபிஐ மாவட்ட செயலாளர் சிவக்குமார், முத்தையன், மதிமுக அரசியல் ஆலோசனை குழு மாவட்ட பொருளாளர் உதயசங்கர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்ட செயலாளர் முகமது அலி மாவட்ட பொருளாளர் நவாப்ஜான் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பி கே தொகுதி செயலாளர் தராசு துணை செயலாளர் மலர்மன்னன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சுலைமான் கான் மற்றும் செங்கம் மேற்கு செங்கம் கிழக்கு தண்டராம்பட்டு மேற்கு தன்றம்பட்டு கிழக்கு ஜவ்வாதுமலை தெற்கு செங்கம் பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.திமுக வேட்பாளர் மு.பெ.கிரி தலைமையில் ஜவ்வாது மலை வாழ் மக்கள் , தண்டராம்பட்டு , அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பல்வேறு கட்சியினர் தம்முடைய கட்சியிலிருந்து விலகி திமுக கட்சியில் 500-க்கும் மேற்பட்டோர் இணைத்துக் கொண்டனர்.நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com