44
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகபூப்பாளையம் பகுதியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ராஜா தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது,மதுரை எஸ்எஸ் காலனி பகுதியை சேர்ந்த உணவு பொருட்கள் மொத்த விற்பனை வியாபாரி செல்வகுமார் என்பவர் இன்று பொருள்களை கடைகளுக்கு விநியோகம் செய்து விட்டு திரும்பி சரக்கு வாகனத்தில் வந்தவர்களை கண்காணிப்பு அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்ததில்,தொடர்ந்து அவரிடம் கணக்கில் வராத ரூ.2,80,000 ரொக்க பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டூர்சாமி முன்னிலையில் சீலிட்டு பணத்தை மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.தொடர்ந்து உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபர் தரும் பட்சத்தில் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டூர்சாமி தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.