சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் வேட்புமனு தாக்கலுக்கு முன்பு துணை முதல்வரின் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் காலில் விழுந்து ஆசி பெற்றது அங்கிருந்த அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுதமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது அதனையொட்டி அரசியல் கட்சியினர் பிரச்சாரம் மற்றும் வேட்புமனுத் தாக்கலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாணிக்கம் இன்று வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் தமது குரு ஓ பன்னீர் செல்வத்தின் மகனான ஓ பி ரவீந்திரநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இது அங்கு உள்ளவர்கள் மத்தியில் வயதில் இளையவராக இருந்தாலும் காரியத்திற்காக காலை பிடிக்கும் வேலையில் மாணிக்கம் எம்எல்ஏ ஈடுபட்டதாக கூறி சிரித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.