Home செய்திகள் பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி. ஏடிஎம்மில் கைவரிசை காட்டிய ஆசாமி கைது

பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து நூதன மோசடி. ஏடிஎம்மில் கைவரிசை காட்டிய ஆசாமி கைது

by mohan

மதுரை பணம் எடுக்க வருபவர்களை குறிவைத்து ஏடிஎம்மில் நூதன மோசடி செய்த மர்ம ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.திருமங்கலம் சாத்தான்குடி மேல தெருவை சேர்ந்தவர் அண் புஷ்பம் 40 இவர் திருமங்கலம் விருதுநகர் ரோட்டில் உள்ள ஏடிஎம்மில் பணம் போடுவதற்காக சென்றுள்ளார். அவருக்கு உதவி செய்வதாக கூறிய மர்மநபர் அண்ணபுஷ்பத்திடம் போலியானஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு பின்னர் அவர் அந்த இடத்திற்கு சென்று அண்ணபுஷ்பம் கணக்கில்இருந்து பதிமூன்றாயிரம் ஆயிரம் ரூபாயை திருடிச் சென்று விட்டார் .இதுதொடர்பாக அவர் திருமங்கலம் போலீசில் புகார் செய்தார் .அடுத்ததாக திருமங்கலம் கரடிக்கல்லை சேர்ந்தவர் நாகராஜ் 68 .இவரும் திருமங்கலம் விருதுநகர் சாலையில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது அவருக்கு உதவிசெய்வதாக கூறி அவரிடம் போலியான ஏடிஎம்கார்டை கொடுத்துவிட்டு அவர் அக்கவுண்டில் இருந்து 43,600 ஐதிருடிவிட்டார். இது தொடர்பாக நாகராஜ் திருமங்கலத்தில் புகார் செய்தார்.மற்றொருவர் வாடிப்பட்டிதாலுகா நாச்சிகுளம் நரிமேட்டை சேர்ந்தவர் சேர்ந்தவர் பாலசுந்தர வடிவேலு 50 .இவர் வாடிப்பட்டியில்வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது அவருக்கு உதவி செய்வதாக கூறி பழுதான ஏடிஎம் கார்டை திருப்பிக் கொடுத்துவிட்டு அவர் அக்கவுண்டில் இருந்து ரூபாய் 40,000 ஐதிருடப்பட்டுள்ளது .இதுதொடர்பாக பாலசுந்தரவடிவேலு வாடிப்பட்டி போலீசில் புகார் செய்தார். மற்றொரு நபர் வாடிப்பட்டி போடிநாயக்கன்பட்டி ,வண்ணார்தெருவை சேர்ந்தவர் அருண்குமார் 25.இவர் வாடிப்பட்டியில் உள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றபோது அவருக்கு உதவி செய்வதாக கூறி போலியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு பின்னர் அவர் அக்கவுண்டில் இருந்து ரூபாய் 15 ஆயிரத்து 500 ரூபாய் திருடப்பட்டுள்ளது.வாடிப்பட்டி மேட்டுப்பெருமாள்நகரை சேர்ந்தவர் செல்வகுமார் 30. இவர்வாடிப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுக்கச் சென்றபோது அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் பதிமூன்றாயிரத்து நூதனமுறையில் திருடபப்பட்டுள்ளது .இது தொடர்பாக செல்வகுமார் வாடிப்பட்டிபோலீசில் புகார் செய்தார். ,திருமங்கலம்,வாடிப்பட்டிபோலீசார் இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை வலைவீசித் தேடியபோது தேனி மாவட்டம் போடிநாயக்கன்பட்டி யைசேர்ந்த தம்பி ராஜ் 44 என்ற ஒருவரே இந்த மோசடியில் ஈடுபட்டதுதெரியவந்தது .வங்கியிலிருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் கண்காணித்து குற்றவாளியை கைது செய்தனர்.அவரிடம் விசாரித்த போது அவர் திருமங்கலம் மட்டும் வாடிப்பட்டியில் ஏடிஎம் மோசடியில் ரூபாய் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 600 ரூபாய் திருடியதும் தெரியவந்தது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!