Home செய்திகள் முல்லைநகர் பகுதியில் மதுக்கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை .

முல்லைநகர் பகுதியில் மதுக்கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை .

by mohan

மதுரை மாவட்டம் கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை தனக்கன்குளம் முல்லைநகர் பகுதியில் தனியார் பார் ஒன்று செயல்பட்டு இதில் கூலி தொழிலாளி முதல் வாகன ஓட்டுநர் வரை காலையிலேயே அதிக அளவு மது அருந்தி விட்டு செல்வது வாடிக்கையாகவே உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது எனவும் உடனடியாக மதுக்கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு ஷேர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் வாகனத்தை இயக்க முயன்றுள்ளார் அப்பொழுது வாகனம் அவர் கட்டுப்பாட்டை இழந்து எதிரே உள்ள கடையின் மீது மோதி தலைகுப்புற நின்றது தேசிய நெடுஞ்சாலையில் ஷேர் ஆட்டோ தாறுமாறாக ஓடி தலைகுப்புற நின்றது அப்பகுதி மக்களை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது ஆட்டோ ஓட்டுனர் நிதானம் இல்லாமல் இருந்ததாகவும் இதனாலேயே விபத்து ஏற்பட்டதாகவும் அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் உடனடியாக அதனை மூட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் அனைத்து காவல்துறை மீண்டும் வாகன ஓட்டிகளின் அனைவரையும் ப்ரீத் அனலைசர் மூலமாக சோதனை செய்து கடுமையான அபராதம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com