Home செய்திகள் மதுரை – 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல். 4 பேர் கைது

மதுரை – 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல். 4 பேர் கைது

by mohan

மதுரை பைபாஸ் ரோட்டில் விஷத்தன்மை கொண்ட மதுபாட்டில்கள் 503 ஐபறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் சந்திப்பில் விஷத்தன்மை கொண்ட மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .இதைத்தொடர்ந்துமதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது இருசக்கர வாகனங்கள் இரண்டில் 503விஷத்தன்மை கொண்ட மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது .அவ்வாறு விற்பனை செய்த கீரைத்துறை சிந்தாமணி ரோடு வைச் சேர்ந்த முனியசாமி மகன்சந்தானம் 32, மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் ஆறுமுகம் 26 ,மாடக்குளம் மீனாட்சி நகரைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் ராஜ்குமார் 36 ,தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த மூக்கையா மகன் வீரணன் என்ற பாலகிருஷ்ணன் 46 ஆகியோரை கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்திருந்த 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com