38
மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியைச் சேர்ந்த சரோஜா மற்றும் அவருடைய தாய் கமலா இருவரும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அதிகாலை வீட்டிற்கு வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் சேலையால் இருவரையும் கட்டிப் போட்டுவிட்டு வீட்டில் இருந்த 27 சவரன் நகை மற்றும் 85 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளது.சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.