Home செய்திகள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சிறுமி கர்ப்பம் வாலிபர் கைது..

திருமணம் நிச்சயிக்கப்பட்ட சிறுமி கர்ப்பம் வாலிபர் கைது..

by mohan

.மதுரை மாவட்டம் திருமங்கலம் , வேடர்புளியங்குளம் சின்னசாக்கீலிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி . இவர் அங்கு உள்ள ஒரு காளவாசலில் தனது தாயாருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார் . இந்த நிலையில் இவருக்கும் தனக்கன்குளம் முத்துச்சாமி மகன் சுகதேவ் 29. என்பவருக்கும் திருமணப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது . சிறுமிக்கு 18 வயது முடிந்த உடன் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது . இந்த நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் . அங்கு ஸ்கேன் பரிசோதனை செய்த போதும் கரு முழு வளர்ச்சி அடையாத 5 மாத கரு இருப்பது தெரியவந்தது . இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் வளர்ச்சியடையாத கருவைக் அகற்றினர் . 17 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட சுகதேவ் தான் காரணம் என தெரியவந்தது . இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் சுகதேவை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com