.மதுரை மாவட்டம் திருமங்கலம் , வேடர்புளியங்குளம் சின்னசாக்கீலிபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி . இவர் அங்கு உள்ள ஒரு காளவாசலில் தனது தாயாருடன் தங்கி வேலை பார்த்து வருகிறார் . இந்த நிலையில் இவருக்கும் தனக்கன்குளம் முத்துச்சாமி மகன் சுகதேவ் 29. என்பவருக்கும் திருமணப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது . சிறுமிக்கு 18 வயது முடிந்த உடன் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது . இந்த நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் . அங்கு ஸ்கேன் பரிசோதனை செய்த போதும் கரு முழு வளர்ச்சி அடையாத 5 மாத கரு இருப்பது தெரியவந்தது . இதனையடுத்து அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் வளர்ச்சியடையாத கருவைக் அகற்றினர் . 17 வயது சிறுமியின் கர்ப்பத்திற்கு நிச்சயம் செய்யப்பட்ட சுகதேவ் தான் காரணம் என தெரியவந்தது . இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் சுகதேவை திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்…
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.