கட்டிட வேலையின் போது கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி .

மதுரை வில்லா புரத்தை சேர்ந்த சேகர் இவரது மகன் செல்வராஜ் வயது 35 இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார்… மதுரை சிம்மக்கல் தைக்கால் தெரு முத்துலட்சுமி என்பவருக்கு சொந்தமான சாரம் கட்டி புதிய கட்டிடம் சிமெண்ட் பூசு பணி மேற்கொண்டு வந்தார் இந்த கட்டுமானத்தின் போது அருகே அதிக அளவு மின்சார வயர்கள் செல்கிறது அதை கவனிக்காத இவர் எதிர்பாராதவிதமாக உயர் மின்சார வயர் அவர் மீது படவே படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த திலகர் திடல் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மேலே தொங்கிக் கொண்டு இருந்த நேதாஜி ஹரி ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழே இறக்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கட்டிட தொழிலாளி ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது மேலும் எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் கட்டிட பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உயிரிழந்த கட்டிட தொழிலாளிக்கு உரிய இழப்பீடு வாங்கித் தரவேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்