Home செய்திகள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டி.ஆர்.இ.யு. மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் மாபெரும் கண்டன போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டி.ஆர்.இ.யு. மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் மாபெரும் கண்டன போராட்டம்

by mohan

மதுரை ரெயில்வே மேற்கு நுழைவு வாயில் முன்பாக அகில இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய கோரியும் ரயில்வே கோட்டம் டி.ஆர்.இ.யு. மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் மாபெரும் கண்டன போராட்டம்.மதுரை ரெயில்வே மேற்கு நுழைவு வாயில் முன்பாக அகில இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை ரத்து செய்ய கோரியும் ரயில்வே கோட்டம் டி.ஆர்.இ.யு. மற்றும் சி.ஐ.டி.யு. சார்பில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு டி.ஆர்.இ.யு.உதவி கோட்ட தலைவர் கார்த்திக் சங்கிலி தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர்கள் திருமலை அய்யப்பன் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கம் மாநில துணை தலைவர் கோபிநாதன் வாழ்த்துரை வழங்கினார். முடிவில் உதவி கோட்ட மேலாளர் சரவணன் நன்றி கூறினார்.

கீழை நியூஸூக்காக மதுரை கனகராஜ்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com