திருப்பரங்குன்றம் தலுக்காவிற்குடப்பட்ட நிலையூர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான புதிய தார்சாலை அமைத்துதர வேண்டும் என்பதனை மதுரை வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா தலைமையில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக தார் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு அழைப்பு விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அப்பகுதி பொதுமக்கள் ஏற்பட்டது.தொடர்ந்து பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவருக்கு வழி நெடுகிலும் பேனர்கள், கட்டவுட்கள் வைக்கப்பட்டு வெடிவெடித்து வரவேற்பு வழங்கப்பட்டது.தொடர்ந்து நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பேசும்போது;நிவர் புயலால் தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்பதால் பேனர்கள் வைப்பதை தவிர்க்கவேண்டும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டபோது;தமிழக முதல்வர் பொது நிகழ்ச்சிகளின் போது பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் தற்போது அதிமுக சார்பில் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கபடுவதில்லை என்று தெரிவித்தார்.கொரோனா பரவலை மீறியும் திமுக பிரச்சாரம் நடைபெறும் என்று ஸ்டாலின் கூறியிருப்பது குறித்த கேள்விக்குகருணாநிதி பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும் அதிமுக பயந்ததில்லை, உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரத்தை கண்டு அச்சப்பட வில்லை, கொரோனாவில் இருந்து மக்களை காக்கவே தடை விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக திமுகாவின் பிரச்சாரம் அதிமுகவிற்கு சாதகமாக தான் அமைகிறது. திமுக நிர்வாகி தங்கம்தமிழ்செல்வம் பேசும்போது 2021 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று உலருக்கிறார், உதயநிதி ஸ்டாலினோ 2021க்கு பதிலாக 2001 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெறும் என்று தெரிவிக்கின்றனர் என்று கூறினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.