Home செய்திகள் குடோனில் தீ விபத்து பல லட்சம் பொருட்கள் சேதம:

குடோனில் தீ விபத்து பல லட்சம் பொருட்கள் சேதம:

by mohan

சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் செல்லமணி என்பவர் பந்தல் அமைப்பாளர் மேலும் பாத்திரம் சேர் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார் சாமியானா பந்தல் துனிகள் மற்றும் மின் விசிறிகள்,விஐபி சேர்கள் பாத்திரம் ஆகிய பொருட்களை வைக்க திருவேடகம் தெற்கு ரத வீதியில் ஒரு குடோன் இருக்கிறது நேற்று தீபாவளி கிராமத்தில் பட்டாசு வெடித்தனர் 14/11/2020 மாலை 7மணிஅளவில் பந்தல் அமைப்பாளர் செல்ல மணிக்கு சொந்தமான குடோனில் புகை வந்தது அருகில் இருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயர்ச்சி செய்தனர் அதற்குள் வேகமாக தீ பரவியதால் குடோனில் இருந்த 12 இருந்து 15 இலட்சம் மதிப்பிலான சாமியானா பந்தல் துனிகள் மற்றும் மின் விசிறிகள் விஐபி சேர்கள் அனைத்தும் தீயில் கருகியது ஏற்கனவே கொரனாவினால் திருமணம் விழா மற்றும் திருவிழாக்கள் ஏதும் இல்லாத நிலையில் வேலை வாய்ப்பின்றி இருந்த அவர் இப்போது வாழ்வதாரத்த இழந்து தவித்து வருகிறார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com