Home செய்திகள் மழையால் சுவர் இடிந்து வீழ்ந்ததில் தூங்கி கொண்டிருந்தவர் பலி, மூன்று தினங்களுக்கு பின் உடல் மீட்பு

மழையால் சுவர் இடிந்து வீழ்ந்ததில் தூங்கி கொண்டிருந்தவர் பலி, மூன்று தினங்களுக்கு பின் உடல் மீட்பு

by mohan

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த செம்புரணி ரோட்டில் வசிப்பவர் மூக்கையா.55 வயதான இவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும் நாதஸ்வர வித்துவானான இவர் மூன்று தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால்தூங்கி கொண்டிருந்த மூக்கையா பரிதாபமாக உயிரிழந்த சூழலில் மூன்று தினங்களாக வீட்டை விட்டு வெளியே வராத்தை கண்டும், வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை கண்டு அக்கம் பக்கத்தினர் இன்று மூக்கையாவின் வீட்டிற்கு சென்று பார்த்த போது சுவர் விழுந்ததால் சுவர் இடிபாடுகளில் உயிரிழந்த நிலையில் இருந்ததை கண்டு போலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.அவனியாபுரம் போலிசார் இவரது மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com