Home செய்திகள் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிச்சாமிகோரிப்பாளையம்தேவர்சிலைக்குமாலையணிவித்தார்.

தமிழக முதல்வர்எடப்பாடி பழனிச்சாமிகோரிப்பாளையம்தேவர்சிலைக்குமாலையணிவித்தார்.

by mohan

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை கோரிப்பாளையம் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.முதல்வர் வருகையையொட்டி கட்சி பிரமுகர்கள் பூர்ண கும்ப மரியாதையுடன் கைகளில் பதாகைகள் ஏந்தி வரவேற்பளித்தனர்.தமிழக முதல்வருடன் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் எம்.எல் ஏக்களும் மரியாதை செலுத்தினர்.தொடர்ந்துமதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதல்வர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.இதன் பின் முதல்வரும், அமைச்சர்களும் கமுதி பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த கிளம்பி சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com