மதுரை ரயில் நிலையம் மேற்கு நுழைவாயில் அருகே கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் முன்பு AlOBC ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் சார்பாக இந்திய ரயில்வேயில் தனியார்மயத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்கோட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக பாலகுமார் உட்பட ரயில்வே தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில்இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் ரயில்களை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது ஓபிசிக்காண இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும், தமிழ்நாட்டில் ரயில்வேயில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு புதியஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்ரயில்வேயில் அப்ரண்டீஸ் முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.