12
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் செம்பூரணி ரோட்டில் குப்பை தொட்டி உள்ளது.அதன் அருகே ஹோட்டல் ஒன்று உள்ளதால் ஹோட்டல் உரிமையாளர் குப்பைத்தொட்டியை மாற்றி வைக்க மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து குப்பைத்தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பழைய இடத்திலேயே குப்பை தொட்டி வைக்க வேண்டும் என கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 40 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறித்து தகவல் அறிந்து வந்த அவனியாபுரம் போலீசார் பொதுமக்களிடம் சமரசம் செய்து குப்பைத்தொட்டியை வேறு இடத்திற்கு மாற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் 12 பெண்கள் உள்பட பேர் கலந்து கொண்டரை்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.