11
சோழவந்தான் காவல் நிலையத்திற்குட்பட்ட எல்லையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சமயநல்லூர் ஊர்மெச்சிகுளத்தை சேர்ந்த லோகேஷ் ராஜ் (21) என்பவர் கீழே கண்டெடுக்கப்பட்ட 3 பவுன் தங்க சங்கலியை சோழவந்தான் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த தகவலை சமூக வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்து காவல் நிலையம் வந்த, நகையின் உரிமையாளரான தச்சம்பத்தை சேர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி பரமேஸ்வரி என்பவரிடம் விசாரித்து 3 பவுன் தங்க நகையை நேற்று 25.05.20 ம் தேதி காவல் ஆய்வாளர்,ராமநாராயணன் தலைமையில் வழங்கப்பட்டது. பின்னர் கல்லூரி மாணவர் லோகேஷ்ராஜை காவல்துறையினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்a
You must be logged in to post a comment.