144 தடை உத்தரவை மீறி செயல் பட்டவர்கள் மீது 9128 வழக்குகள் பதிவு செய்து, வழக்கில் சம்பந்தப்பட்ட 12,294 நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிலிருந்து மீது 4781 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று 27.04.2020ம் தேதி மட்டும் விதி மீறலில் ஈடுபட்டவர்கள் மீது 302 வழக்கு பதிவு செய்து, வழக்கில் சம்பந்தப்பட்ட 458 நபர்களை கைது செய்து, அவர்களிடருந்து129 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . மேலும் மதுவிலக்கு குற்றங்கள் செய்பவர்கள் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 நபர்களை கைது செய்து, 26 மது பாட்டில்கள் மற்றும் 4 லிட்டர் கள்ளசாராயம், ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.இந்த விதி மீறல்களை தடுக்கும் வகையில் காவல்துறை அதிகாரிகள் மூலம் மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.மேலும் தடை உத்தரவை அனைத்து பொதுமக்களும் கண்டிப்பாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறும், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.நெ.மணிவண்ணன். IPS., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.