மதுரை மாவட்டம் அச்சம்பத்து மந்தை அருகே மதுரை காளவாசல் இருந்து நாகமலை புதுக்கோட்டை சென்றுகொண்டிருந்த ஷேர் ஆட்டோ ஒன்று ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு வேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரியின் மீது ஷேர் ஆட்டோ பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த தாய் மகன் மற்றும் மகள் ஆட்டோ ஓட்டுனர் படுகாயம் அடைந்தனர் .சம்பவம் அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக 108 வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கவே 108 வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து வரவே வாலாந்தூர் காவலர் பிரேம் அவரது மகள் சேர்ந்த ஹிரா பிருந்தா என்னும் 8 வயது சிறுமி ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் தாய் மற்றும் மகனுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தினசரி நிகழ்வாக மாறிவரும் ஷேர் ஆட்டோ விபத்துக்கள் . ஷேர் ஆட்டோ விபத்துக்கள் தடுக்கப்படுமா இவர்கள் டிக்கெட் ஏற்றுவதற்காக போட்டா போட்டி போட்டுக்கொண்டு மக்களின் உயிருடன் விளையாடும் இதுபோன்ற ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது .கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை மாநகர ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன் உரிமம் இல்லாமல் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத 18 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது அனைத்து பகுதியிலும் தீவிர கண்காணிப்பில் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது. மக்களின் உயிர்காக்க மாநகர காவல்துறை ஆணையாளர் மற்றும் மாநகர காவல் துறையும் உறுதுணையாக இருப்பார்கள் என்பது பொது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து பயணம் செய்யும் பயணிகளுக்கும் சாலையில் செல்லும் பொதுமக்கள் உயிருக்கும் உத்தரவாதம் தரும்படி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.