16
மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்டெய்னர் லாரி இடித்ததில் மரக்கிளை ஒடிந்து மின் கம்பியில் சிக்கி தொங்கியவாறு விழுந்து கிடந்தது. நல்ல வேளையாக யார் மீதும் விழவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . மின் இணைப்பை துண்டிக்க மின் ஊழியர் வந்தும் மின் இணைப்பை துண்டிக்க அனுமதி கிடைக்க வில்லை. கலெக்டர் அலுவலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் நடந்ததால் மின் இணைப்பை துண்டிக்க அனுமதி மறுக்கப்பட்டது. தல்லாகுளம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக வந்து மின் இணைப்பை துண்டிக்காமல் லாவகமாக மரக்கிளைகளை வெட்டி அகற்றினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.