12
தஞ்சாவூர் மாவட்டம்¸ கரந்தையில் உள்ள ஆதிஸ்வர சுவாமி ஜெயின் கோவிலில் இருந்து 1 ஐம்பொன் சிலை உள்பட 22 சிலைகள் திருடப்பட்டதாக வந்த புகாரின் பேரில்¸ உதவி ஆய்வாளர் சுகுமாரன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு¸ குற்றவாளிகளை தேடிவந்த நிலையில்¸ 07.03.2020ம் தேதியன்று சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து¸ அவர்களிடமிருந்து சிலைகள் கைப்பற்றப்பட்டது. சிறப்பாக பணியாற்றி சிலைகளை மீட்ட தனிப்படையினரை தஞ்சாவூர் சரக காவல் துணை தலைவர் முனைவர் லோகநாதன்.¸ மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . மகேஸ்வரன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்கள்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.