7
.மதுரை எல்லீஸ் நகர் சேர்ந்த ரஜினி சுந்தர் என்பவர் ரஜினிகாந்த்தின் எந்த ஒரு புதிய படங்கள் வந்தாலும் அதற்கு முன் அவருடைய ஃபர்ஸ்ட்லுக் தோற்றத்தை ஓவியமாக வரைந்து அனைவரின் கவனத்தை ஈர்த்து வந்தார் .மேலும் அவர் இல்லம் முழுவதும் அவர் ஆரம்ப காலத்தில் இருந்து நடித்திருந்த படம் முதல் தற்போது வெளியான தர்பார் படம் வரையும் ஓவியங்களை அவர் இல்லம் முழுவதும் ஒரு அருங்காட்சியம் போல அமைத்திருந்தார். இதுகுறித்து பத்திரிக்கையில் செய்திகள் வெளியாகியிருந்தது. இதனை கண்ட நடிகர் ரஜினிகாந்த்அவர் குடும்பத்தை சென்னைக்கு அழைத்து வந்து அவர் இல்லத்தில் வைத்து அவரை பாராட்டு தெரிவித்து புகைப்படம் எடுத்துக் கொண்டாா். இது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.