Home செய்திகள் வடமாநிலங்களில் எந்த கட்சி எம்பியும் பாஜகவில் சேரவில்லை. வடமாநில ஊடகங்களை கொண்டு பாஜ பொய்பிரச்சாரம் செய்கின்றது-என விருதுநகர் எம்.பி.மாணிக் தாகூர் குற்றம் சாட்டினார்

வடமாநிலங்களில் எந்த கட்சி எம்பியும் பாஜகவில் சேரவில்லை. வடமாநில ஊடகங்களை கொண்டு பாஜ பொய்பிரச்சாரம் செய்கின்றது-என விருதுநகர் எம்.பி.மாணிக் தாகூர் குற்றம் சாட்டினார்

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சுற்றுப்பயணம் மேற்க்கொண்டார்.இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி கீழப்புதூரில் கட்சிப்பிரமுகர் SPM சிவா-சந்திரன் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாத நிலையில் வீட்டில் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் பாஜவும் ஆர்எஸ்எஸ்ம் பொய்யிலேயே ஊறிப்போனர்கள்.விநாயகரையே பால் குடிக்க வைக்க வச்ச இயக்கம் ஆர்.எஸ்எஸ்.இயக்கம்.எந்தவொரு பொய்யையும் புரட்டையும் பரப்புவது இவர்களது டிஎன்ஏ விலேயே உள்ளது. வடமாநிலங்களில் எந்த கட்சி எம்பியும் பாஜகவில் சேரவில்லை. வடமாநில ஊடகங்களை துணைக்கு வைத்துக் கொண்டு பாஜ பொய்பிரச்சாரம் செய்கின்றது என குற்றம் சாட்டினர்..இந்நிகழ்ச்சிகள் காங்கிரஸ் திமுக கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

உசிலை மோகன்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com