வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாங்கனி மற்றும் மாங்காய்களை விவசாயம் செய்யும் விவசாயிகள், அரசில் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விளைந்த மாம்பழங்களை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்.
குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் உள்ள ஒட்டு மொத்த விவசாயிகளும் தங்கள் நிலத்தில் விளைந்த மாங்காய்களை ஆந்திர மாநிலத்தில் கொண்டு சென்று விற்க தடை விதித்ததால் தங்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாங்கள் உற்பத்தி செய்த மாங்காய்களை மூட்டை, மூட்டையாக குடியாத்தம் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் செல்லும். நெடுஞ்சாலையில் கொட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் மாநில இனணப்பு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், காவல் துறை அதிகாரிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
You must be logged in to post a comment.