14
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றிய எஸ். மஞ்சுநாத் பதவி உயர்வில் சேலம் மாவட்டத்திற்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதனையடுத்து மண்டபம் பேரூராட்சி முதல்நிலை செயல் அலுவலராக சு.மெய்மொழி கூடுதல் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். தொண்டி பேரூராட்சி செயல் அலுவலரான, இவர் ஆர் எஸ்.மங்கலம், மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment.