Home செய்திகள் .மதுரை – மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் .

.மதுரை – மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் .

by mohan

மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன் வசந்த், மண்டல தலைவர் சுவீதா விமல் மற்றும் பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இதில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.திருப்பரங்குன்றம் அவனியாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.அவனியாபுரம் அரசு நடுநிலை பள்ளியில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன்வசந்த், திருப்பரங்குன்றம் மண்டலம் 5ன் தலைவர் சுவிதா விமல் ,மாமன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி, முத்துலட்சுமி அய்யனார் மதுரை மாநகரட்சி உதவி பொறியாளர் செல்வ விநாயகம் மற்றும் அரசின் சமுக நலன் , வருவாய், குடிமை பொருள், காவல்துறை, முதலமைச்சர் தனிப்பிரிவு, உள்ளிட்ட பல்துறை அதிகரிகள் கலந்து கொண்டனர்.மக்களின் முதல்வர் குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்களிடம் அதிகாரிகள் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com