மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் பக்தர்களிடம் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் உட்பட 8 பேர் கைது..
மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள கட்ராபாளையத்தில் தனியார் விடுதியில் சுற்றுலா வந்ததாக கூறி மத்திய பிரதேசத்தை சேர்ந்த எட்டு பேர் கொண்ட கும்பல் கடந்த 20ஆம் தேதி 2 அறை எடுத்து தங்கி இருந்தனர்.
![](https://i0.wp.com/keelainews.com/wp-content/uploads/2024/04/Picsart_24-04-22_22-17-10-495-medium.jpg?resize=300%2C300&ssl=1)
{“remix_data”:[],”source_tags”:[],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:false,”containsFTESticker”:false}
இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கி இருந்த அறையிலிருந்து தண்ணீர் கேட்டதாகவும் அந்த நேரத்தில் ரூம்பாய் வெளியே சென்றதால் அந்த விடுதியில் பணிபுரியும் மேனேஜர் அரசகுமார் தண்ணீர் எடுத்துச் செல்லும்போது அந்த அறையில் கூட்டமாக அமர்ந்து ஹிந்தியில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் முடிந்து வரும் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டு இருந்ததும் அதற்காக இரண்டு கொரடு மற்றும் மிளகாய் பொடி பாக்கெட்டுகள் வைத்திருப்பதாகவும், பேசிக்கொண்டனர்.
ஒன்றும் தெரியாதது போல் அறையில் இருந்து வெளியே வந்த அரசகுமார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் அங்கு வந்த போலீசார் மத்திய பிரதேசத்தை சேர்ந்த நவ்சத், ஹின்னா கான், சப்னா ஷா, ஜெய்தா ஷா, அன்வர் ஷா, ஷமிம் ஷா, ராஜா ஷா, ருக்ஷனா ஐந்து பெண்கள் உட்பட எட்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம்
You must be logged in to post a comment.