சிறந்த சேவைக்கான விருது மற்றும் பண முடிப்பு வழங்கும் விழா…!
அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம் – ஆனந்தம் சேவாசங்கம் இணைந்து நடத்தும் சிலப்பதிகாரத் தொடர்சொற்பொழிவு நிறைவு நாள் : 22 . 02 . 2020 சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இந்நிழ்வு தெற்குத் துகார் கட்டடம் , இந்துஸ்தான் சேம்பரில் நடைபெற்றது. குறளிசைச் செல்வர் சொ.பத்மநாபன் தலைமை: சிலம்புநம்பி முனைவர் இளவரச அமிழ்தன் தொடக்கவுரை : முனைவர் க . ஸ்ரீதரன் வேந்தர் – கலசலிங்கம் பல்கலைக்கழகம் சிலப்பதிகார உரை சிலம்புச் செம்மல் தமிழமுதன் கல்வி வள்ளல் கலசலிங்கம் விருதாளர் திரு . A . ஹரிகிருஷ்ண ன் , திருமதி ஜெயந்தி ஹரிகிருஷ்ணன் நேதாஜி மெடி டிரஸ்ட் ஆம்புலன்ஸ் சர்வீஸ் , மதுரை , பாராட்டு சான்றிதழும் பணமுடிப்பும் வழங்கப்பட்டது.
தமிழறிஞர் நல்லாமூர் முனைவர் திரு கோ . பெரியண்ண ன் அவர்கள் தலைவர் , தமிழ் எழுத்தாளர் சங்கம் கவியரங்கம் : தமிழறிஞரைப் பாராட்டும் கவிஞர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர் இதில் கலந்து கொண்டவர்கள் நேதாஜி அரிகிருஷ்ணன் ஐ பற்றி கூறும் பொழுது எந்தவிதமான எதிர்பார்ப்புமில்லாமல் பொதுமக்களின் உதவுவது குறிக்கோளாக கொண்டு அவர் மட்டும் இல்லாத அவரது குடும்பமும் அவருக்கு உறுதுணையாக இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது எனவும் எத்தனையோ ஆதரவற்ற பிரேதங்களை அவர் சொந்த செலவிலேயே அடக்கம் செய்து யாருமே செய்யக்கூடிய அளவிற்கு பயந்து நடக்க கூடிய அச்சம் செய்யக்கூடிய உடல்களை கூட அவர்கள் ஊழியர்களோடு இருவரும் இணைந்து உடல்களை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அறைக்கு கொண்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் இது போன்ற எண்ணற்ற செயல்களை இவர் செய்துவருவது மதுரைக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் எனவும் மேலும் பல விருதுகளைப் பெற்று தொடர்ந்து தொண்டாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு என தெரிவித்தனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.