13
மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கப்பட்டது.!
வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தலைமையில் மதுரை தானப்பமுதலி தெருவில் உள்ள மாநகராட்சி வீடற்றோர் இல்லத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மதுரையின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடகத் துறையினர் பங்கேற்று உணவு பரிமாறினர்.
அங்கு வசிக்கும் முதியோர்கள் தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டதோடு அனைவரையும் ஆசிர்வதித்தனர்.
இல்லத்தின் பொறுப்பாளர் சபாபதி அவர்கள் வழிகாட்டி மணிகண்டன் அவர்களுக்கு மரக்கன்று கொடுத்து நன்றி தெரிவித்தார். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.