Home செய்திகள் வீட்டுமனை பட்டா வேண்டி முடி திருத்தும் தொழிலாளர்கள் வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு..

வீட்டுமனை பட்டா வேண்டி முடி திருத்தும் தொழிலாளர்கள் வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு..

by Askar

வீட்டுமனை பட்டா வேண்டி முடி திருத்தும் தொழிலாளர்கள் வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா முடி திருத்தும் தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பாக வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார்மூர்த்தியிடம் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட துணை தலைவர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன்,வாடிப்பட்டி நகர தலைவர் முத்துப்பாண்டி,நகரச் செயலாளர் கோபி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- மருத்துவர் சமூக சங்கத்தை சார்ந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் பல தலைமுறையாக வாடிப்பட்டி தாலுகாவில் வாழ்ந்து கொண்டு தொழில் செய்து வருகிறோம். கடந்த கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தற்போது வரை அதிலிருந்து மீள முடியாமல் உள்ளோம்.எங்களில் பெரும்பாலானோருக்கு சரிவர வேலை வாய்ப்பு இன்றி அவதி அடைந்து வருகின்றனர். இதனால் தாங்கள் வசிக்கும் வாடகை வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர் எனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக வாடிப்பட்டி தாலுகா மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும்எங்கள் மருத்துவ சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!