Home செய்திகள் பெரும் தொழிற்சாலைக்கு காட்டும் அக்கறையை முதலமைச்சர் சிறு,குறு தொழில்சாலைக்கும்  காட்ட வேண்டும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி..

பெரும் தொழிற்சாலைக்கு காட்டும் அக்கறையை முதலமைச்சர் சிறு,குறு தொழில்சாலைக்கும்  காட்ட வேண்டும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி..

by Askar

பெரும் தொழிற்சாலைக்கு காட்டும் அக்கறையை முதலமைச்சர் சிறு,குறு தொழில்சாலைக்கும்  காட்ட வேண்டும், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அதிரடி..

மதுரைக்கு வருகிற முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையின் வளர்ச்சிக்காக ஏதேனும் ஒரு திட்டத்தை கொடுப்பாரா என்று மதுரை மக்கள் ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.
வாக்களித்த மக்கள் ஏமாற்றம் அடைந்து இந்த அரசின் மீது கடும் கோபத்தில் இருப்பதை நாம் அறிய முடிகின்றது.. ஏன் என்று சொன்னால் இன்றைக்கு ஆட்சி பொறுப்பேற்று மூன்றாண்டுகளை நெருங்கி இருந்த நேரத்திலே அவருடைய தந்தையார் பெயரிலே ஒரு நூலகமும், ஒரு விளையாட்டு மைதானத்தின் திறப்பதற்கு அவர் காட்டிய அக்க்கரையில் அவர் அறிவித்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் காட்டி இருந்தால் மிக எளிய முறையிலே மக்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு வழி ஏற்பட்டிருக்கும். ஆகவே வழிவகைகள் ஏற்படவில்லை.அதனால்,
மனதிலே வலி தான் ஏற்பட்டிருக்கிறது. 
 மதுரையிலே, டைட்டில் பார்க் அறிவித்து அதில், பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று முதலமைச்சர் அறிவித்தார்கள்.  அறிவிப்பு நிலையிலே, கானல் நீராக காட்சி தருகிறது. அதேபோன்று, தொழில் வளர்ச்சியில் மதுரை மாவட்டத்தை முன்னிறுத்தி மதுரையில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று சொன்னீர்கள் அதுவும் இப்போது கேள்விக்குறியாக இருக்கிறது.
அம்மா, எடப்பாடியார் ஆகியோர்   ஆட்சிகாலத்தில் சிப்காட் அமைக்கிற போது 20% இட ஒதுக்கீடுகள் வழங்கி முன்னுரிமை வழங்கப்பட்டது.  இதனால், பெருந்தொழிலும், சிறு தொழில்களும் இரு தண்டவாளங்களாக  இணைந்து முழுமையாக  வளர்ச்சியிலே 100% உச்சத்தை அடைய முடிந்தது.
தற்போது, மின் கட்டணம் உயர்வால் சிறு,குறு நிறுவனங்கள் நசிந்து போகிறது.மேலும் ஏற்கனவே, வெளியிட்ட அம்மா அரசு வெளியிட்ட அரசாணையை நீங்கள் செயல்படாத காரணத்தால், சிறுகுறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் எங்கு இருக்கிறது என்று தேடவேண்டிய நிலை இருக்கிறது .கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிறு தொழில் எங்கே இருக்கிறது என்று தமிழ்நாட்டில் தேட வேண்டிய ஒரு நிலைமைக்கு திமுக அரசு உள்ளாக்கி இருக்கின்றது. 

மதுரை சிறைச்சாலை  வளாகம் மாநகராட்சி வெளியே புறநகர் பகுதியில், புதிய இடத்துக்கு அமைக்கப்படும். தற்போது, உள்ள அந்த சிறைப்பகுதி வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்த வகையில் பசுமை பகுதியாக அமைக்கப்படும் என்று சொன்னார்கள்.
அதுவும் கானல் நீராக தான் காட்சியளிக்கிறது. 
மதுரையில் வளர்ச்சிக்காக எடப்பாடியார் பல்வேறு வளர்ச்சிகளை மேற்கொண்டார். அதேபோல், கடந்த 2022 ஆம் ஆண்டு மதுரை மாநகரை மேம்படுத்துவதற்காக 14 பேர் கொண்ட நகர வளர்ச்சி குழுவை உருவாக்கினீர்கள் அந்த குழு என்னானது என்று மதுரை மக்களுடைய கேள்வியாக இருக்கிறது. 

2021 மார்ச் மாதம் தேர்தல் பிரச்சாரத்தில்
 எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒத்தக் கல்லை காட்டி விளம்பரம் தேடினீர்கள்,. விளம்பரம் தேடுவதில் நீங்கள் காட்டுகிற அக்கரையை அந்த திட்டத்தை நிறைவேற்றுவதிலும்,  திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்வதிலும், அந்த திட்டத்தை மக்களுடைய பயன்பாட்டிற்கும், அர்ப்பணிப்பதிலும் நீங்கள் அக்கறை காட்டுவதற்கு முன் வருவீர்களா என்று மக்கள் கேட்கின்றார்கள்.

இன்றைக்கு ,நீங்கள் அலங்காநல்லூருக்கு போகிறீர்கள் அந்த அலங்காநல்லூரில் நழிவடைந்த நிலையில் இருக்கிற சர்க்கரை ஆலையை இயக்க அந்த தொழிலாளர்கள் மிகவும் வேதனையோடு கண்ணீரோடு இருக்கிறார்கள்.
ஆகவே, அந்த விவசாயகளுடைய கண்ணீரை துடைக்கின்ற வகையில் ,அந்த சர்க்கரை ஆலை மீண்டும் இயங்குவதற்கு வழி ஏற்படுமா? 


 திருமங்கலம் தொகுதியில், அம்மா  ஆட்சி காலத்திலே ரயில்வே மேம்பாலத்திற்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு பூமி பூஜைக்கு போடப்பட்டு அங்கே அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

அதேபோல, திருமங்கலம் யூனியன் அலுவலகத்திற்கு புதிய கட்டிடத்திற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பூர்வமான பணிகள் செய்யப்பட்டது. அதற்கு கட்டிடம் கட்டுவதற்கு அரசு முன் வருமா?. அதேபோல் அம்மா ஆட்சி காலத்தில் புதிய பேருந்து நிலையம் ஏற்படுத்த செயல்படுத்தப்பட்டது அதை நிறைவேற்ற இந்த அரசு முன்வருமா? திருமங்கலம் கப்பலூர் டோல்கேட் அகற்றப்படும் என்று நீங்கள் சொன்னீர்கள் அதற்கு தனி அக்கறை செலுத்த வேண்டும் என்று மதுரை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 
 நீங்கள் பலமுறை மதுரைக்கு வந்தீர்கள் ஆனால், மதுரைக்கு எந்த வளர்ச்சியும் இல்லை.

தற்போது நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கூட நீங்கள் பாரபட்சத்தோடு நடந்து கொண்டீர்கள் என்கிற  ஒரு கவலை  ஏற்பட்டிருக்கிறது.
ஒரு பைசா கூட மதுரைக்கு தொழில் வளர்ச்சிக்கு நீங்கள் ஒதுக்கீடு செய்வதற்கு முன் வராதது மிகப்பெரிய அளவில காயம் ஏற்பட்டிருக்கிறது. 
 நீங்கள், மதுரை வருவதை நாங்கள் மகிழ்ச்சியோடு எதிர் கொள்கிறோம். ஆனால், அந்த மகிழ்ச்சி வளர்ச்சிக்கான அடித்தளமாக இருக்குமா? அல்லது வெறும் விளம்பரத்திற்காவா? தன்னுடைய தந்தையார் பெயரை கல்வெட்டிலே பதிப்பதற்கான விழாவாக மட்டும் அமைகிறது என்று மக்கள் எண்ணுகிறார்கள்.

 உங்கள் வருகையால்,
மதுரை மீண்டும் மீண்டும் விளம்பரத்தினால் அல்லோல படுகினது, மதுரையின் வளர்ச்சி அடைவதற்கு ஒரு துரும்பையும் நாங்கள் கில்லி போட மாட்டோம் என்று நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் ஆனால் ,வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலே மதுரை மாவட்டத்தில் பத்து தொகுதிகளில் மூன்று நாடாளுமன்றங்கள் மதுரை,தேனி , விருதுநகர் தொகுதிகளில் உங்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

 எடப்பாடியார் மதுரைக்கு வருகிற போதெல்லாம் ,மதுரையின்
வளர்ச்சிக்கான அடையாளங்களை அவர் உருவாக்கி விட்டுச் சென்றார்.  மதுரையினுடைய தொழில் வளர்ச்சிக்கு புரட்சித்தலைவி அம்மா   மதுரை, தூத்துக்குடி எக்கடாமிக் காரிடாரை உருவாக்கிக் கொடுத்தார்கள்.

அதேபோல 9 மாவட்டங்களை, ஒரு மண்டலங்களாக பிரித்து அங்கே தொழில் வளர்ச்சி அடைவதற்கு புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளில் மேற்கொண்டார்கள் 
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் காட்டும் அக்கறையில்,
இந்த மண்ணின் மைந்தர்களால் நடத்தப்படுகிற சிறுகுறு தொழில்களுக்கு நீங்கள் இடம் அளித்து அக்கரை காட்டவேண்டும்.
அம்மாவுடைய ஆட்சிகாலத்தில் சொந்தமாக நிலம் வழங்கப்பட்டது. அதை நீங்கள் குத்தகை முறைக்கு மாற்றி இருப்பதும் இன்றைக்கு அவர்களுக்கு வேதனை அளிப்பதாக இருக்கிறது.

1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஜல்லிக்கட்டை மைதானத்திற்கு கொண்டு சென்று பொம்மை விளையாட்டாக நடத்தக்கூடாது. இன்றைக்கு ஜல்லிக்கட்டின் இலக்கணமே தகர்த்தெறியப்பட்டு இருப்பது இன்றைக்கு வேதனையின் உச்சமாக இருப்பதாக மதுரை மக்கள்  எல்லாம் கருத்து தெரிவிப்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆகவே, எல்லாவற்றிலுமே நீங்கள் மாற்றம் ஏற்படுகிறது என்று கூறுகிறீர்கள்.

ஆனால், அதில் முன்னேற்றம் இல்லை தமிழ்நாடு பின்னேற்றமாக இருக்கிறது. அறிவித்த திட்டங்கள் கானல் நீராக காட்சியளிக்கிறது அதை நீங்கள் கவனத்தில் கொண்டு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com