10
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் பழுது ஏற்பட்டால் அதனை சீரமைக்க தனியார் பங்களிப்புடன் 10க்கும் மேற்பட்ட நடமாடும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மலைப்பாதையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவார்கள். மலைப் பாதையில் வாகனங்கள் பழுதானால் குழுவினர் உடனடியாக சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள். வாகன சீரமைப்பு குழுக்களின் செயல்பாட்டினை கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னுசாமி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
You must be logged in to post a comment.