Home செய்திகள் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் ஜப்பானிய மலர்கள்..வீடியோ..

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவரும் ஜப்பானிய மலர்கள்..வீடியோ..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது குறிஞ்சி மலர் கண்காட்சி முடியும் தருவாயில் உள்ளது. இப்போது சுற்றுலா பயணிகளை வெகுவாக ஜப்பான் வைல்டு ப்ளவர் என்றழைக்கப்படும் ரப்பர் மர பிங்க்சிட்டிப் பூ கவர்ந்துள்ளது.

இந்த பூவானது செர்ரி வண்ணத்தில் கொடைக்கானல் ஏரி பூங்கா மற்றும் சுற்றுலா இடங்களிலும் பூத்து குலுங்குகின்றது. இந்தப் பூவை காண பல மாநிலங்களிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமே உள்ளனர். இதன் முக்கிய காரணம் ஜப்பான் அரசு இந்த பூ பூக்கும் ஆண்டை வருடாவருடம் அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. வேறு எங்கும் கிடைக்காத பொக்கிஷம் கொடைக்கானல் மலையில் பூத்துகுலுங்குவதாலும் இயற்கை சீதோசனம் அருமையாக உள்ளதாலும் கொடைக்கானலில் ஆப் சீசன் களைகட்டியுள்ளது.

கீழைநியூஸ் செய்திகளுக்காக கொடைக்கானல் செய்தியாளர் கோடைரஜினி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!