Home செய்திகள் கீழக்கரை வெல்ஃபேர் அசோசியேசன் பணியை வரும் அக்டோபர் மாதம் முதல் நிறுத்துகிறது.. நகராட்சியின் பின் விளைவு அறியாத கோரிக்கையால் ஏற்பட போகும் விபரீதம்..

கீழக்கரை வெல்ஃபேர் அசோசியேசன் பணியை வரும் அக்டோபர் மாதம் முதல் நிறுத்துகிறது.. நகராட்சியின் பின் விளைவு அறியாத கோரிக்கையால் ஏற்பட போகும் விபரீதம்..

by ஆசிரியர்

கீழக்கரை நகரில் மட்டும் நாளொன்றுக்கு 17 முதல் 20டன்கள் வரை குப்பைகள் வெளியேற்றப்படுகிறது. இக் குப்பைகளை மறு சுழற்சி அடிப்படையில் உரமாக மாற்றும் நோக்கில் அரசு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உரமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பல கொடுத்தும் வருகிறது.

கீழக்கரை நகரின் தூய்மை பணிகள் அரசை நம்பி இல்லாமல் “கீழக்கரை வெல்பர் அசோசியசன்” இப்பணியை நீண்ட காலமாக ஊர் சுகாதாரம் கருதி செய்து வருகிறது. மேலும்  கடந்த 1 மாத காலமாக அரசு துப்புரவு தொழிலாளர்களுடன் மேலும் 50 ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு நகரை சுத்தம் செய்கிறது. இவர்கள் காலை 07.00 மணிக்கே வீட்டிற்கு வந்து குப்பைகளை சேகரிக்கின்றனர். அதன் பின் வரும் வெல்பர் வண்டியில் ஓரிரு வீடுகளில் தருவதாலும், தெருவில் முதலில் உள்ள வீட்டில் உள்ளோர் இப்பகுதியில் நகராட்சியினர் குப்பைகளை வாங்கி சென்று விட்டனர் என கூறுவதால் தெருக்குள்  உள்ளே சென்று குப்பை எடுக்காமல் சென்று விடுகின்றனர் என்ற குறையும் வெல்ஃபேர் அசோசியன் மீது உள்ளது, ஆனாலும் காலம் தாமதமாக செல்வதால் நகராட்சியினரிடம் அதிகாலை குப்பைகளை கொடுக்க முடியாதவர்களுக்கு ஏதுவாக உள்ளது என்பதை நடைமுறை யதார்த்தம்.

காலை 07.00 மணிக்கு நகராட்சியினர் வீடு தேடி வரும்போது பல வீடுகள் பூட்டிக் கிடப்பதால் குப்பை எடுக்காமல் சென்று விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு நகராட்சியினர் மீதும் உள்ளது. இதுகுறித்து வெல்பர் அசோசியசன் முதன்மை மேலாளர் அப்துல் அஜீஸ் கூறுகையில் “நீங்கள் குப்பை எடுக்க வேண்டாம் நகராட்சியினரே எடுத்துக்கொள்வார்கள் என நேரடியாக என்னிடம் நகராட்சி அதிகாரிகள் கூறுவதால் வருகின்ற 01.10.18 முதல் ஒரு மாத காலம் வீடுகளில் குப்பை எடுப்பதை நிறுத்த போகிறோம். எங்களின் சேவை பொதுமக்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அரசுக்கு தெரியப்படுத்தவே இம் முடிவு. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துகிறோம். ” என்றார்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சேவைகளை எதிர்பார்த்து பல நகராட்சிகள் இருக்கும் வேலையில், பல வருடஙலகளாக சேவை நோக்குடன் செய்து வரும் பணியை தடுத்து நிறுத்தும் கீழக்கரை நகராட்சியின் செயல் விந்தையாக உள்ளது.  இதனால் பாதிக்கப்பட போவது பொதுமக்கள்தான், ஆகையால் சமூக ஆர்வலர்கள் தலையிட்டு இப்பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்பது அனைவரின் எதர்பார்ப்பாக உள்ளது.

தகவல்:- மக்கள் டீம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!