17
கரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசு அறிவுறுத்தலின்படி கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. கடந்த 42 நாட்களாக மூடப்பட்ட கடைகள் இன்று 4.5.2020 தேதி சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடைகள் அனைத்தும். காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதைத்தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இன்று கடைகள் திறக்கப்பட்டு மக்கள் அவங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் சென்று வருகிறார்கள். இதில் மக்கள் அநேக இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கமலும் அதிகமான மக்கள் முக கவசம் அணியாமலும் வருகின்றன. இந்த தளர்வு சுமூகமாக தொடர பொதுமக்கள் அரசு விதித்த விதிமுறைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும், தவறும் பட்சத்தில் மீண்டும் கடுமையான கட்டுபாடுகளுக்கு உள்ளாகலாம்.
கீழை நியூஸ் SKV சுஐபு
You must be logged in to post a comment.