20
ஆத்தூர் தாலுகா சித்தையன் கோட்டை பகுதியில் இயங்கும் நியாயவிலை கடைகளில் சிறப்பு பொருட்கள் வினியோகம்!
கொரோனா தொற்று வைரஸ்நோய் பரவல் காரணமாக அரசு 144 தடைஉத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனடிப்படையில் வருவாய் இன்றி தவிக்கும் மக்களுக்கு குடும்ப அட்டை மூலமாக அவர்கள் சார்ந்துள்ள அந்தந்த நியாயவிலை கடை மூலமாக கொரொனா சிறப்பு தொகுப்பு பொருட்களாக அரிசி,பருப்பு,பாமாயில், சீனி ஆகிய உணவுப் பொருட்கள் கொடுப்பதற்கான அரசானை வெளியிட்டது. அதனை அமுல் படுத்தும் விதமாக திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை பகுதியில் DD36 எண்உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கும் ஐந்து கடைகளிலும் முன்கூட்டியே வீடுவீடாக டோக்கன் கொடுக்கப்பட்டு இன்று சமூக இடைவெளியை கடைபித்து சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல், பக்ருதீன்
You must be logged in to post a comment.