Home செய்திகள் உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது.. உடந்தையாக இருந்தவர் தலைமறைவு…

உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது.. உடந்தையாக இருந்தவர் தலைமறைவு…

by ஆசிரியர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த உத்தப்ப நாயக்கனூர் ஊராட்சி முத்துவீரன்பட்டியைச் சேர்ந்தவர் ஐயாச்சாமி என்பவர் அவரது தோட்டத்தில் கடந்த ஒரு வருட காலமாக கஞ்சா செடி வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் போதைப் பொருள் தடுப்பு மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்து அதன் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அய்யாசாமி தோட்டத்தை ஆய்வு செய்தபோது கனகாம்பரம் பூச்செடிகளுக்கு நடுவே கஞ்சா செடி வளர்த்துள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஸ்டீபன் ராஜ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட தனிப்படை போலீசார் ஐயாச்சாமியை கைது செய்து தோட்டத்தில் பயிரிடப்பட்ட 80க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை அழித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.மேலும்

கஞ்சா செடி வளர்ப்பதற்கு சாமிக்கண்ணு என்பவரும் உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் சாமிக்கண்ணுவை தேடி வருவதை அறிந்து தலை மறைவாகி விட்டார். தப்பியோடிய சாமிக்கண்ணுவை போலீசார் தேடி வருகின்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!