12
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பூ விவசாயம் செய்யப்பட்டு நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக வருகிறது. தற்போது பனி அதிக அளவில் இருப்பதால் வரத்து குறைவாக உள்ளது இந்நிலையில் நாளை பொங்கல் பண்டிகை என்பதால் மல்லிகை பூவின் விலை எகிறியது.
நேற்று முன்தினம் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்ற மல்லிகை இன்று 1500 ஐ தாண்டியது. இதனால் மல்லிகை பூ பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
செய்தி:- நிலக்கோட்டை ராஜா
You must be logged in to post a comment.